புதுசாக வரும் ரொமான்டிக் சீரியல்.. ராதிகா சரத்குமார் தயாரிக்கப் போகும் புது சீரியல் – Cinemapettai

Tamil Cinema News

சீரியல்கள் ஏற்கனவே எக்கச்சக்கமான சீனர்கள் சின்னத்திரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இன்னும் போட்டி போட்டு புது புது சீரியல்கள் வந்து கொண்டிருக்கும் தருணத்தில் ராதிகா சரத்குமார் நிறுவனமான ராடன் மீடியா தயாரிப்பில் ரொமாண்டிக் சீரியல் ஒன்று புதுசாக வரப்போகிறது.

இந்த தலைப்பு காத்து வாக்குல இரண்டு காதல், இது சன் டிவி சீரியலுக்கு போட்டி போடும் விதமாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது. இந்த தொடரில் கதை ஒரு ஹீரோ இரண்டு ஹீரோயின்கள் மையமாக வைத்து இருக்கப் போகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த கதையை போல ஹீரோ இரண்டு பெண்கள் மீது காதல் கொள்ளும் விதமாக இருக்கப் போகிறது. அதாவது பெருசாக எதிர் மீதும் ஆசைப்படாத ஒரு ஆணுக்கு முதல்முறையாக இரண்டு பெண்களிடம் கிடைக்கும் காதல் மற்றும் நம்பிக்கையை மையமாக வைத்து இருக்கப் போகிறது.

அந்த வகையில் அந்த இரண்டு பெண்களின் உறவை தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் ஆணின் போராட்டத்தை நகைச்சுவையாகவும் புனர்பூர்வமாகவும் கதை இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக கூறப்பட்டு இருக்கிறது. இதில் ஹீரோவாக அனில் சவுத்ரி கமிட் ஆகி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக பாப்ரி கோஷ் மற்றும் மௌனிகா கமிட் ஆகியிருக்கிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.