பௌண்டரி கழுகு கேட்ச்க்கு வந்தது புது ரூல்ஸ்.. மில்லர், சூரிய குமாரால் வந்த பூகம்பம் – Cinemapettai

Tamil Cinema News

மெரிலிபோன் கிரிக்கெட் கிளப்(MCC), கிரிக்கெட் போட்டிகளில் இதுதான் ரூல்ஸ் அமல்படுத்தும் ஒரு கிளப். ஏதாவது புதிய விதிமுறை ஒன்றை அமல்படுத்தினால் அது இவர்கள் வகுக்கும் திட்டத்தின் கீழ் தான் வரும். இவர்கள் சமீபகாலமாக சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்படும் பவுண்டரி லைன் கழுகு கேட்ச்க்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

வருகிற ஜூன் 17ஆம் தேதியிலிருந்து இந்த புது விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல், T20, 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் போன்ற பெரும்பாலான மேச்சுகளுக்கு இந்த விதிமுறை உபயோகமாக இருக்கும். பந்தை பவுண்டரி எல்லையில் தடுத்து பிடிக்கும் இந்த கேட்ச்க்கு போடப்பட்ட புது ரூல்ஸ் என்னவென்றால்,

வீரர்கள் பந்தை எல்லைக்கோட்டில் தாவி பிடித்து தள்ளாடி உள்ளே வீசிவிட்டு, பின்னர் வந்து மீண்டும் பிடிக்கிறார்கள் இந்த நடைமுறை நீண்ட நாட்களாக அவுட் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் தான் இப்பொழுது பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் இது அமலுக்கு வருகிறது.

பந்தை பிடித்து உள்ளே வீசும் வீரர்கள் ஒரு முறை மட்டும் தான் பௌண்டரி லைனுக்கு வெளியில் கால் வைக்க வேண்டும். ஓரிரு முறைக்கு மேல் போய் வந்தால் அது நாட் அவுட் என்று புதிய விதிமுறையில் வகுக்கப்பட்டுள்ளது. அதை போல் தாவி பிடித்த வீரர், பின் ஓடி வந்த மற்ற வீரருக்கு பந்தை பாஸ் கொடுப்பார்.

தடுமாறி வேறொரு வீரரிடம் பந்தை வீசும்போது, அந்த மற்றொரு வீரர் பந்தை பிடிக்கும் நேரத்தில், எல்லை கோட்டுக்கு வெளியில் தடுமாறி விழுந்த வீரரும் உள்ளே வந்திருக்க வேண்டும்,அப்படி இருந்தால் மட்டுமே அது அவுட் என புதிய விதிமுறை சொல்கிறது. இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணமாய் அமைந்தது 20 ஓவர் உலகக் கோப்பையில் சூரியகுமார் யாதவ்,மில்லருக்கு பிடித்த கேட்ச் தான். அந்த நேரத்தில் அது சலசலப்பை ஏற்படுத்தியது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.