மகளை நிழல் போல் தொடரும் தாய்குலம்.. நேரம் பார்த்து விபூதி அடித்த நடிகர், கேரவனில் நடந்த கூத்து – Cinemapettai

Tamil Cinema News

Gossip: பொதுவாக நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது தாய்க்குலத்தை கையோடு அழைத்து வருவார்கள். காலம் காலமாக இதுதான் நடந்து வருகிறது. இதில் அந்த உயர்ந்த நடிகை மட்டும் கொஞ்சம் விதிவிலக்கானவர்.

இப்போது அவர் நடிக்கவில்லை என்றாலும் பிஸியாக இருந்த காலத்தில் அப்பாவை துணைக்கு அழைத்து வருவார். அதனாலேயே அவரிடம் எந்த நடிகரும் நெருங்க முயற்சித்தது கிடையாது.

அப்படித்தான் தற்போது வளர்ந்து வரும் ஒரு நடிகை படப்பிடிப்புக்கு தன் அம்மாவுடன் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய அம்மாவும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கவனிக்காத குறையாக மகளை கண்ணும் கருத்துமாக காத்துக் கொள்கிறார்.

மகளை நிழல் போல் தொடரும் தாய்குலம்..

ஆனாலும் அந்த பெரிய ஹீரோ நடிகைக்கு சிக்னல் கொடுத்திருக்கிறார். அம்மா இருந்ததால் நடிகை அவஸ்தையோடு நடிகரை அவாய்ட் செய்திருக்கிறார். இப்படி இருக்க ஒரு நாள் தாய்குலம் சிறு வேலையாக வெளியில் சென்று இருக்கிறார்.

உடனே நடிகை நடிகருடன் நட்பை வளர்க்க கேரவன் சென்று விட்டாராம். ஆனால் தாய்குலம் சூட்டிங் ஸ்பாட்டில் ஒருவரை பாடிகார்டா நடிகைக்கே தெரியாமல் வைத்திருக்கிறார். அவர் மூலம் இந்த விவரம் தாய்குலத்தின் காதுக்கும் சென்றிருக்கிறது.

உடனே அடித்து பிடித்து ஓடி வந்தார் அவர் கேரவன் கதவை தட்டி இருக்கிறார். அப்போது இருவரும் கேஷுவலாக இருப்பது போல் காட்டி இருக்கின்றனர். ஆனாலும் நடிகையின் முகத்தை வைத்து விஷயத்தை யூகித்து கொண்ட தாய்குலம் கையோடு அவரை அழைத்துச் சென்று விட்டாராம்

இப்படி அந்த ஹீரோ தாய்குலத்திற்கு விபூதி அடித்திருக்கிறார். இந்த விவகாரம் தான் இப்போது கோடம்பாக்க வட்டாரத்தில் சத்தமில்லாமல் பேசப்பட்டு வருகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.