முட்டாள்கள் என இங்கிலாந்தை விளாசிய கோவக்கார பேர்வழி.. மைக்கேல் வாகனை வெளுத்த டர்பன் தாத்தா – Cinemapettai

Tamil Cinema News

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட், முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி அபாரமாக விளையாடி ரண்களை குவித்தது.

கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஓப்பனர் எஸ் எஸ் வி ஜெய்ஸ்வால் சதம் அடித்து இந்திய அணியை வலுவான நிலையில் உட்கார வைத்துள்ளனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. ரிஷப் பந்த் மற்றும் கில் இருவரும் விளையாடி வருகிறார்கள்.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலர் இந்தியாவை வம்பிழுத்து வந்தனர். இங்கிலாந்து போன்ற சவால் மிகுந்த அணியை இந்தியா எதிர்கொள்வது கடினம். இந்த தொடரை இங்கிலாந்து 4-1 என்ற கணக்கில் வெற்றி பெறும்.

இங்கிலாந்து முன்னால் கேப்டன் மைக்கேல் வாகன், கிரேம் ஸ்வான் போன்ற வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு இந்தியாவுடன் விளையாடுவது பயிற்சி போட்டி. நாங்கள் ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்த போட்டிகள் இருக்கும், மற்றபடி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இந்திய அணியை ஏளனமாக பேசினார்கள்.

இவர்கள் வாயெல்லாம் புண்ணாகும் விதமாக நேற்று இந்திய அணி தனது விஸ்வரூபத்தை காட்டியது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து அவர்கள் பேசியதற்கு பதிலடி கொடுத்தது. இதனால் இங்கிலாந்து அணியை பழி தீர்க்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜத் சிங் சித்து பதில் அடி கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு வாய் மட்டும்தான் பேசுகிறது. நேற்றைய ஆட்டத்தில் அவர்கள் பவுலர்கள் எல்லோரும் மைதானத்தில் புல் புடுங்க சென்று விட்டார்கள். தண்ணீரே ஊற்றாமல் வளர்ந்த முட்டாள்கள் அவர்கள் என சித்து தன் பங்கிற்கு இங்கிலாந்தை வெளுத்து வாங்கி வருகிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.