மொத்தமாய் வன்மத்துக்கு தனுஷ் போட்ட எண்டு கார்டு.. சத்யராஜ் போல் ஆரம்பத்திலேயே கிள்ளி எரிந்த சுள்ளான் – Cinemapettai

Tamil Cinema News

தனுஷ் நடிக்க வந்த புதிதில் பல பேருடைய கேலி கிண்டலுக்கு ஆளானார். நாக்குப்பூச்சி நடிகர், அப்பா, அண்ணன் தயவால் சினிமாவுக்கு வந்துவிட்டார் என்பது போன்ற பல வன்மங்கள் இவர் மீது வைக்கப்பட்டது. எதையும் பொறுப்பெடுத்தாமல் வெற்றி பெற்று இன்று ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார்.

நடிக்க வந்த புதிதில் இப்படி பேசுவது சகஜம் தான் ஆனால் அதையே தொடர்ந்து இன்று வரை வன்மத்தை கக்குவதால் தான் தனுஷ் பொங்கி எழுந்தார். யார் வீட்டில் என்ன பிரச்சனை நடந்தாலும் அதற்கு காரணம் தனுஷ் தான் என்று கிளப்பி விடுகிறார்கள்.

இன்று தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அந்தஸ்தில் இருக்கும் தனுஷிற்கு இப்பேற்பட்ட அவப்பெயர்கள் பிடிக்கவில்லை. அது மட்டும் இன்றி அவருடைய பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். இனிமேல் தனுஷ் மீது வைக்கப்படும் வன்மங்கள் எல்லாம் மொத்த குடும்பத்தையும் பாதிக்கும்.

தங்களுடைய பிள்ளைகள் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதற்காகவே தனுஷ் குபேரா ஆடியோ வெளியீட்டு விழாவில் தன்னுடைய மனக்குமுறல்களை போட்டுடைத்தார். என் வளர்ச்சி பல பேருக்கு பிடிக்கவில்லை என்னை தொடர்ந்து தாக்குகிறார்கள் என்றெல்லாம் பேசினார்.

தனுஷ்சை போலவே ஆரம்பத்தில் சத்யராஜ் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போது, குமுதத்தில் ஒரு கட்டுரை வந்தது. அது மறைமுகமாக சத்யராஜ் கதையைத்தான் இன்னொரு பெண்ணுடன் சேர்த்து எழுதினார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இது சத்யராஜ் கதை தான் என தெரிந்தது. அது காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் அவருடைய பிள்ளைகளை பாதித்ததால் அப்பொழுதே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் சத்யராஜ்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.