மொத்த விஷத்தையும் கொட்டி தீர்த்த குணசேகரன்.. நந்தினியின் விஸ்வரூபத்தை பார்த்து கதறிய மல்லு வேஷ்டிகள் – Cinemapettai

Tamil Cinema News

ஒரு வழியா மணிவிழாவை சோலி முடித்த டீம் அடுத்து தாரா பாப்பாவின் மஞ்சள் நீராட்டு விழாவை வெற்றிகரமாக முடித்தது. இந்த விழாவில் தன் வீட்டுப் பெண்களின் விஸ்வரூபத்தை பார்த்து மிரண்டுள்ளார் குணசேகரன். நந்தினி காட்டிய விஸ்வரூபத்தில் ஆடிப்போனார்

செய்வதறியாது ரூமுக்குள் சென்று தோற்றுப் போய் நிற்கிறோமே என்ற வருத்தத்தில் இருக்கிறார். தன்னை தேடி வந்த கதிரிடம் தோற்றுவிட்டோம் என முதல் முதலாக அவர் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். கதிர்ரையும் பிடித்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார்.

ஒரு சவால் விட்டால் அதில் ஜெயிக்க வேண்டும், இல்லை என்றால் நாமெல்லாம் வாழ்ந்து எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படி அசிங்கப்பட்டு வாழும் வாழ்க்கை தேவையே இல்லை என கதிர்ரை திட்டுகிறார். கதிர் விட்ட சவாலில் தோற்றுப் போய் நிற்கிறார்.

நந்தினியின் தம்பியை ஆள் வைத்து கடத்தினார் கதிர் ஆனால் அவர் சரியான நேரத்திற்கு தப்பித்து வந்து தாய்மாமன் முறையை சீரும் சிறப்புமாக செய்து முடித்து விட்டார். இதுதான் குணசேகரன் மற்றும் கதிர் அசிங்கப்பட்டதற்கு காரணமாக நினைக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் குணசேகரன் வீட்டுப் பெண்களைபார்த்து அவர்கள் விஸ்வரூபத்தை காட்டி விட்டார்கள், ஜெயித்து விட்டார்கள். நந்தினி சாதாரண பெண் அல்ல, அவளை என்னமோ நினைத்து விட்டோம் என அவரது கணவர் கதிரிடமே விஷத்தை கக்குகிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.