ரகசிய திருமணத்தால் முத்துவிடம் மாட்டிக்கொள்ளும் மீனா.. ரோகினியை அந்தரத்தில் தவிக்க விட்ட மனோஜ் – Cinemapettai

Tamil Cinema News

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி நம்மிடம் கொடுத்தது திருட்டு நகை என்று விஜயாக்கு தெரிய வந்த நிலையில் வீட்டில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணி ரோகிணியை அடித்து திட்டிவிட்டார். பிறகு ரோகிணி இந்த திருட்டு நகைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு தெரிந்தவரிடம் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து இந்த நகையை வாங்கி உங்களுக்கு பரிசாக கொடுத்தேன் என்று சொல்கிறார்.

இதையெல்லாம் கேட்ட விஜயா கடைசியில், நீ ஏமாந்தவரிடம் சென்று கொடுத்த பணத்தை திருப்பி வாங்கி அதை என்னிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் ரோகினிடம் மனோஜ் நீ கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். இப்பொழுது எப்படி அம்மாவிடம் பணத்தை கொடுக்கப் போகிறாய் என்று கேள்வி கேட்டு அம்மா பிள்ளையாகவே ரோகினிடம் பேசுகிறார்.

ரோகிணி உங்க அம்மாக்கு நான் பரிசாக தான் கொடுத்தேன், அது திருட்டு நகை என்றால் நான் ஏமாந்த பணத்தை எப்படியாவது வாங்க வேண்டும். ஆனால் அதற்காக அந்த பணத்தை வாங்கி உங்க அம்மாவிடம் கொடுக்க வேண்டும் என்று நீயும் உங்க அம்மாவும் செல்வது எப்படி சரியாக இருக்கும் என்று கேட்கிறார். அத்துடன் உங்க அம்மா என்னை திட்டி அடிக்கும் பொழுது நீ எனக்காக சப்போர்ட் பண்ணி எதுவும் பேசாமல் வேடிக்கை பார்க்கிறாய்.

இதுதான் என் மீது இருக்கும் பாசமா என்று ரோகிணி, மனோஜிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு மனோஜ், நீ பணக்கார பொண்ணு என்று பொய் சொல்லாமல் இருந்திருக்கணும். அது மட்டும் உண்மையாக இருந்திருந்தால் அம்மாவே உன்னை தலையில் தூக்கி வைத்து இருப்பார். நானும் அம்மாவிடம் ஏதாவது உனக்கு சப்போர்ட்டாக பேசி இருப்பேன். எல்லா தவறும் உன் மீது இருக்கும் போது நானும் அம்மாவும் என்ன பண்ண முடியும் என்று ரோகினியை கழட்டிவிடும் விதமாக மனோஜ் பேசி விட்டார்.

அத்துடன் நீ பணத்தை வாங்கும்பொழுது தனியாக போக வேண்டாம் முத்துவை கூட்டிட்டு போ என்று சொன்னதும் ரோகிணிக்கு இன்னும் கோவம் அதிகமாகிவிட்டது. உடனே ரோகிணி யாரும் வரத் தேவையில்லை நானே வாங்கிக் கொள்கிறேன் என்று போய்விடுகிறார். அடுத்ததாக சீதா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணுவதை நினைத்து கொஞ்சம் பீலிங்கா வீட்டிலிருந்து கிளம்புகிறார். மீனாவும் முத்துவிடம் உண்மைய சொல்லாமல் பொய் சொல்லி ஒரு விஷயத்தை பண்ண போகிறோமோ என்று கவலையுடன் ரிஜிஸ்டர் ஆபிசுக்கு போகிறார்.

ஆனாலும் தங்கையின் சந்தோஷத்திற்காக மீனா, ரிஜிஸ்டர் ஆபீஸில் அருண் மற்றும் சீதாவிற்கு ரகசிய திருமணத்தை பண்ணி வைக்கிறார். அங்கே முருகனை கூட்டிட்டு வந்த முத்து, மீனாவை பார்த்ததும் அதிர்ச்சியாகி விடுகிறார். பிறகு மாலையும் கழுத்துமாய் நிற்கும் அருண் மற்றும் சீதாவை பார்த்து முத்து கோவப்பட்டு மீனாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பப் போகிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.