ராஜி கொளுத்தி போட்டதால் பாண்டியனிடம் மோதும் முத்துவேல்.. ஆத்திரத்தில் குமரவேலுவை தூண்டிவிட்ட சக்திவேல் – Cinemapettai

Tamil Cinema News

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், அரசி குமரவேலுவிடம் எந்தவித கஷ்டத்தையும் அனுபவிக்க கூடாது என்பதற்காக ராஜி, குமரவேலுவை சந்தித்து அரசி அங்கு கஷ்டப்பட்டால் நான் இங்கு கஷ்டப்படும்படி ஆகிவிடும் என்று செண்டிமெண்டாக பேசிப் பார்த்தார். ஆனால் குமரவேலு எதையும் காது கொடுத்து கேட்காமல் ராஜி சொல்வதை அலட்சியப்படுத்தி விட்டார்.

இதனால் ராஜி, முத்துவேலுவை சந்தித்து அரசி அங்கே சந்தோஷமாக இருந்தால் தான் நான் இங்கே சந்தோஷமாக இருக்க முடியும். அங்கே குமரவேலு, அரசியை டார்ச்சர் பண்ணினால் மொத்த கோபத்தையும் கதிர் என் மீது காட்டுவான் என்று ஒரு சும்மா டிராமா போட்டு முத்துவேல் இடம் கொளுத்தி போட்டு விட்டார். முத்துவேலும் மகள் மீது இருக்கும் பாசத்தினால் வீட்டிற்கு சென்று சக்திவேல் முன்னாடி குமரவேலுவை எச்சரிக்கை கொடுத்து நமக்கு பகை பாண்டியன் தான்.

அதனால் அரசியை எந்த விதத்திலும் பழிவாங்க கூடாது, அரசி கூட சந்தோசமாக இருக்கிற வழிய பாரு என்று எச்சரிக்கை கொடுத்தார். இதை கேட்ட அரசி, முத்துவேல் முன்னாடி எனக்கு கொஞ்சம் டிரஸ் வேணும். குமார வாங்கி கொடுக்க சொல்லுங்க என சொல்கிறார். உடனே முத்துவேல், குமாரை முறைத்து பார்த்த நிலையில் வயதில் குமார் நான் கூட போய் வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.

இதையெல்லாம் பார்த்து சக்திவேல், அண்ணனுக்கு திடீர்னு என்ன ஆச்சு என்று கேட்ட பொழுது குமரவேலு, ராஜி என்னிடம் பேசினார். அரசி இங்கே கஷ்டப்பட்டால் ராஜியும் கஷ்டத்தை அனுபவிப்பதாக என்னிடம் சொன்னால், நான் கேட்கலை என்று தெரிந்ததும் முத்துவேல் பெரிப்பாவிடம் சொல்லி இருப்பார். அதனால்தான் மகள் மீது இருக்கும் பாசத்தை இப்பொழுது காட்டிட்டு போவதாக குமரவேலு சக்திவேலுவிடம் சொல்கிறார்.

உடனே சக்திவேல் இதுதான் சான்ஸ் அனைவரையும் பழி வாங்குவதற்கு நீதான் அரசியை காயப்படுத்த வேண்டும் என்று குமரவேலுவை தூண்டி விடுகிறார். பிறகு முத்துவேலும் சக்திவேலும் போய்க்கொண்டிருக்கும் பொழுது எதிர்க்கே பாண்டியனும் வருகிறார். அப்பொழுது பாண்டியன் எதுவும் பேசாமல் ஒதுங்கிப் போன நிலையில் முத்துவேல், உனக்கும் எனக்கும் பிரச்சனை என்றால் அது ஆம்பளைங்களோட முடித்து விட வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்களிடம் யாரும் காட்டக்கூடாது, உன் வீட்டில் இருக்கும் என்னுடைய மகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். அவள் என் மகளை இல்லை என்று தலைமுழுகினேன், ஆனால் அவளுக்கு ஒரு பிரச்சனை என்றால் உங்க யாரையும் நான் விடமாட்டேன் என்று பாண்டியனிடம் மோதும் அளவிற்கு முத்துவேல் எச்சரிக்கை கொடுத்து விட்டார்.

பாண்டியனுக்கு ஒன்றும் புரியவில்லை ஆனாலும் முத்துவேல், ராஜியே மகளாக நினைத்து பாசத்தை காட்டி பேசியது நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டார். ராஜி கொளுத்தி பட்ட ஒரு விஷயம் நாலா பக்கமும் பூகம்பமாக வெடித்து வருகிறது. இன்னொரு பக்கம் இதையெல்லாம் பார்த்த சக்திவேல், குமரவேலுக்கு போன் பண்ணி அரசியை கதற விட வேண்டும் என்று சொல்லுகிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி குமரவேலு, அரசியை கூட்டிட்டு டிரஸ் கடைக்கு போகிறார். அப்படியே அரசி டிரஸ் கடையில் துணிகளை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது நைசாக குமரவேலு அங்கு இருந்து கிளம்பி விடுகிறார். வீட்டிற்கு வந்ததும் குமரவேலு, சக்திவேல் இடம் நான் அரிசியை கடையில் அப்படியே விட்டுட்டு வந்து விட்டேன். எடுத்து துணிக்கு பணம் கொடுக்க முடியாமல் தவிக்க போகிறார் என்று சந்தோசமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அரசி, குமாரவேலு கார்டை வைத்திருந்ததால் அதன் மூலம் எடுத்து துணிக்கு பணத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு கெத்தாக வந்து விடுகிறார். அடுத்ததாக தங்கமயில், அம்மா சொன்னபடி சரவணனை கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக மொத்த பாசத்தையும் காட்டி ஓவராக சரவணன் மீது அக்கறையாக நடந்து கொள்கிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.