ரோகிணி போல திருட்டு வேலையை பார்த்த மீனா.. சீதாவிடம் சத்தியம் கேட்கும் முத்து – Cinemapettai

Tamil Cinema News

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதாவின் சந்தோஷத்திற்காகவும் ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமைய வேண்டும் என்பதால் முத்துவுக்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்கலாம் என்று மீனா முடிவெடுத்து விட்டார். அதன்படி மீனா வீட்டில் இருந்தபடி பூமாலையே கட்டிட்டு வந்து ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் விட்டார்.

அங்கே சீதா மற்றும் அருனும் வந்து விட்டார்கள், பிறகு ஐயரையும் வரச் சொல்லி சீதா மற்றும் அருண் மாலை மாத்தி முறைப்படி ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். இதற்கு சாட்சி கையெழுத்து மீனா போட்டு, போட்டோக்களையும் எடுத்துக்கொண்டார். அதை இடத்திற்கு முருகன், முத்துவை கூட்டிட்டு வித்யாவை கல்யாணம் பண்ணுவதற்கு விசாரிக்க வந்திருக்கிறார்.

ஆனால் முத்து கண்ணில் சிக்காத படி அருண் சீதா கல்யாணமான விஷயம் தெரியாதபடி இரண்டு பேரும் வீட்டிற்கு போய்விட்டார்கள். பிறகு மீனாவை மட்டும் முத்து சந்தித்த நிலையில் உண்மையை சொல்லாமல் மீனா இங்கே ஒரு கல்யாணம் நடந்தது. அதற்கு மாலையை நான் தான் கட்டிட்டு வந்து கொடுத்தேன் என்று சாதாரணமாக பொய் சொல்லி முத்துவிடமிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

ஆனால் என்னதான் முத்துவிடம் இருந்து உண்மையை மறைத்தாலும் மீனாவுக்கு ஒரு கஷ்டம் என்றாலும், மீனா குடும்பத்தில் யாருக்காவது ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் ஓடி வந்து உதவி செய்வது முத்து தான். அப்படிப்பட்ட முத்துவை ஏமாற்றி மீனா, சீதாவிற்கு கல்யாணம் பண்ணி வைத்தது ரோகிணி மாதிரியே தில்லாலங்கடி வேலையில் இறங்கி திருட்டு கல்யாணத்தை ரகசியமாக செய்து முடித்து விட்டார்.

அடுத்ததாக மீனா மீது கொஞ்சம் கூட சந்தேகப்படாமல் முத்து, மீனா சொல்வதை நம்பி மாமியார் வீட்டிற்கு போய்விட்டார். அங்கே சத்யா காலேஜ் முடித்து எக்ஸாமில் பாஸ் மார்க் வாங்கியதால் அங்கு இருப்பவர்களுக்கு விருந்து சாப்பாடு மொட்டை மாடியில் கொடுப்பதற்கு முத்து அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணி விட்டார். பிறகு எதுவும் நடக்காத படி சீதா அங்கே இருந்த நிலையில் மீனா சீதாவைக் கூட்டிட்டு மொட்டை மாடிக்கு போகிறார்.

அங்கே எல்லோரும் சாப்பிட்டு முத்துவை பற்றி பெருமையாக மாமியாரிடம் சொல்கிறார்கள். இருந்தாலும் மீனா அம்மா, தங்கி இருக்கும் வீட்டு ஓனர், முத்துவை பார்த்து எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறாய். இதே மாதிரி சீதா ஆசைப்பட்ட அருணுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று சொல்கிறார். அதற்கு முத்து, அருண் கெட்டவன் மாதிரி பேசி சீதாவின் வாழ்க்கை ரொம்ப முக்கியம் என்ற அக்கறையில் பேசி கொள்கிறார்.

அப்பொழுது அந்த ஓனர், நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் உன்னுடைய மச்சினிச்சி உனக்கு தெரியாமல் திருட்டு கல்யாணம் பண்ணி விட்டால் நீ என்ன பண்ணுவாய் என்று கேட்கிறார். அதற்கு முத்து என்னுடைய மச்சினிச்சி அப்படி பண்ணக்கூடிய ஆளு கிடையாது என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் சீதாவை கூப்பிடுகிறார்.

உடனே சீதாவிடம் நான் என் மாமா பார்த்த பையனை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று இவரிடம் சொல்லு என வற்புறுத்துகிறார். ஆனால் ஏற்கனவே சீதா திருட்டு கல்யாணத்தை செய்து விட்டதால் இந்த சத்தியத்தை பண்ண முடியாமல் பரிதவித்து நிற்கிறார். பிறகு மீனா தான் இந்த விஷயத்தை டைவர்ட் பண்ணுவார். ஆனால் இப்பொழுது தெரியவில்லை என்றாலும் ஒரு நேரத்தில் தெரிய வரும் பொழுது மீனாவுக்கு முத்து மூலம் நிச்சயம் பிரச்சனை வரும்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.