லாஜிக்கே இல்லாமல் போகும் எதிர்நீச்சல்.. விளைவுகள் அறியாமல் துப்பாக்கியை தூக்கிய குணசேகரன் – Cinemapettai

Tamil Cinema News

குணசேகரனுக்கு எப்படியாவது அவரது மகன் தர்ஷனை தன் பக்கம் கொண்டு வந்து அறிவுக்கரசி தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். ஆனால் அவரது மனைவி ஈஸ்வரி இருக்கும் வரை அது நடக்காது என்பது தெரிகிறது.

இதனால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் குணசேகரன் தோற்றுப் போகிறார். ஏற்கனவே இப்படித்தான் தம்பி மகள் தாராவின், மஞ்சள் நீராட்டு விழாவிலும் மூக்கரு பட்டு போனார். இப்பொழுது தர்ஷன் விஷயத்திலும் அவர் எண்ணியது எதுவும் கைக்கூடி வரவில்லை.

இதனால் உச்சகட்ட கோபத்தில் இருக்கும் அவர் ஈஸ்வரியை எச்சரிக்கிறார். ஒரு கட்டத்தில் ஈஸ்வரியும் பதிலடி கொடுக்கவே தலையணை கீழ் இருந்த துப்பாக்கியை எடுத்து மேலே சுடுகிறார். என்னிடம் வாலாட்டாதீர்கள் போட்டுத் தள்ளி விடுவேன் என மிரட்டுகிறார்.

குணசேகரனின் அடாவடித்தனத்தை பார்த்த குழந்தைகள் அனைவரும் மிரண்டு போய் உள்ளனர். கதிரின் மனைவி நந்தினி குழந்தைகளை அவர் அம்மா வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து விட்டார். ஏற்கனவே குணசேகரன் இருமுறை ஜனனியை கொள்வதற்கு திட்டம் போட்டார் ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இப்படி முரட்டுத்தனம் காட்டும் குலசேகரனுக்கு பயந்து எதிர்நீச்சல் போடாமல் இருப்பது இந்த நாடகத்தின் பெயரையே கேள்விக்குறியாக்குகிறது. அவர்கள் நினைத்தால் குணசேகரனின் பரோலை எளிதில் கேன்சல் செய்து மீண்டும் அவரை மாமியார் வீட்டுக்கு அனுப்ப முடியும். ஆனால் அந்த லாஜிக் கூட தெரியாமல் பயந்து நடுங்குகிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.