விஜயாவை பைத்தியக்காரி ஆக மாற்றிய ரோகினி.. கல்யாணியின் முகத்திரையை கிழிக்கும் மாமியார் – Cinemapettai

Tamil Cinema News

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி தன்னுடைய வாழ்க்கைக்காக என்ன வேணாலும் பண்ணக்கூடிய ஒரு தந்தரவாதி. அப்படிப்பட்ட ரோகிணி, விஜயாவை பயமுறுத்தி மனோஜை தன்னிடம் இருந்து பிரிக்க முடியாத அளவிற்கு சாமியார் மூலம் ஒரு கட்டுக்கதையை போட்டு விட்டார். அதற்கு ஏற்ற மாதிரி எமதர்மராஜா வேஷம் போட்டு வந்த முத்து, விஜயாவை பயமுறுத்தி விடுகிறார்.

இதனை தொடர்ந்து விஜயா தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கனவில், எருமை மாடு வந்து விஜயாவை பாச கயிறு போட்டு கூட்டிட்டு போனது மாதிரியும், அதனால் தான் இறந்த பிறகு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து அண்ணாமலைக்கு வேறு ஒரு பெண்ணுடன் கல்யாணத்தை நடத்தி வைப்பது போலும் கனவு கண்டார். இதனால் பயந்து போய் முழித்த விஜயா, பக்கத்தில் இருக்கும் அண்ணாமலையை பார்த்து ஆறுதல் ஆகிக் கொள்கிறார்.

அத்துடன் சாமியார் சொன்னபடி சிவப்பு சேலையை யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் கட்டிக் கொண்டார். ஆனாலும் இதை பார்த்த முத்து மற்றும் மீனா, விஜயாவுக்கு ஏதோ ஒரு பயம் ஆகிவிட்டது. அதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் பண்ணுகிறார் என்று பேசிக் கொள்கிறார்கள். அந்த பயத்துடனே இருக்கும் விஜயாவிடம், அண்ணாமலை கீரை கொண்டு வந்திருக்கிறார் என்று ஒரு நபரை வீட்டுக்குள் கூட்டிட்டு வருகிறார்.

அந்த நபர் தான் விஜயாவின் கனவில் அண்ணாமலையுடன் தாலி கட்டின நபர். அதனால் இன்னுமே விஜயா பயந்து போய் விடுகிறார். இதையெல்லாம் பார்க்க ரோகிணி மற்றும் மனோஜ் சந்தோஷப்பட்டு நாம் நினைப்பது போல் எல்லாம் நடக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள். அடுத்தபடியாக பார்வதி வீட்டிற்கு வந்து ஒரு பிறந்தநாள் பங்ஷனுக்கு போகிறோம் என்று விஜயா மற்றும் பார்வதியும் கிளம்பி கொள்கிறார்கள்.

அது சிந்தாமணியின் பிறந்தநாள் பங்க்ஷன் என்பதால் அனைவரும் தாவணி கட்டிட்டு போவதற்கு பிளான் பண்ணி இருக்கிறார்கள். அந்த வகையில் பார்வதி மற்றும் விஜயா தாவணி கட்டிக் கொண்டதை மொத்த குடும்பமும் பார்த்து அதிர்ச்சியாகி விட்டார்கள். இதனைத் தொடர்ந்து பார்வதி வீட்டில் பிறந்த நாள் பங்க்ஷன் முடிந்த கையுடன் அங்கு வந்தவர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டம் என கொண்டாடுகிறார்கள்.

அப்பொழுது ரோகிணி கொடுத்த செயினையும் விஜயா போட்டிருப்பதால் அங்கு வந்த நபர் இது என்னுடைய செயின் என்று அடையாளம் சொல்லி திருடு போனதாக சொல்கிறார். இதனால் அவமானப்பட்ட விஜயா வீட்டுக்கு வந்து அனைவரும் முன்னாடியும், ரோகினி என்னிடம் திருட்டு போனச் செயினை கொடுத்து ஏமாற்றி இருக்கிறார். திருடிட்டு வந்து கொடுத்ததாக சொல்லி ரோகிணியை நல்லா சாத்தும் அளவிற்கு விஜயா கோபத்தை காட்டி அடிக்கிறார்.

இதை பார்ப்பதற்கு இப்பொழுதுதான் மனசு குளு குளுவென்று இருக்கிறது, என்பதற்கு ஏற்ப ரோகினி விஜயாவிடம் அடிவாங்கி விட்டார். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ரோகிணியின் முகத்திரை கிழிந்து, ரோகிணியின் உண்மையான பெயர் கல்யாணி ஏற்கனவே கல்யாணமானவர். ஒரு குழந்தையும் இருக்கிறது, அந்த குழந்தை தான் கிரிஷ் என்ற விஷயமும் இன்னும் கூடிய விரைவில் அனைவருக்கும் தெரிய வரப்போகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.