விஜய்யின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்.. கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பப்பட்ட காரணம் என்ன? – Cinemapettai

Tamil Cinema News

பொதுவாக ரசிகர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக நடிகரின் பிறந்த நாளில் படத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கும் வகையில், ரசிகர்கள் ஆர்வத்துடன் அவரை பின் தொடர்கின்றனர். ஆனால், கொஞ்சம் புதுவிதமான பரபரப்பை உருவாக்கும் ஒரு சம்பவம் தற்போது நடக்கின்றது. அப்படியான சம்பவம் என்னவென்றால், திரைத்துறை முன்னணி நடிகர் விஜய்யின் வீட்டிற்கு ஒரு ரசிகர் புகுந்துள்ளார். இது தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக பரபரப்பாக பரவி வருகின்றது. இவ்வாறு விஜய்யின் வீட்டுக்குள் போன அந்த இளைஞர் குறித்து, இந்த கட்டுரையில் விரிவாக விவரிக்க போகின்றோம்.

விஜய்யின் ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். ரசிகர்களின் மத்தியில் அவருக்கு அதிகமான ஆதரவு உண்டு. ஏனெனில் இவர் எப்போதும் தன்னுடைய ரசிகர்களுக்காக பல முக்கியமான விஷயங்கள் மற்றும் சின்னஞ்சிறு உதவிகளை அளித்துள்ளார்.

விஜய்யின் வீட்டுக்குள் புகுந்த ரசிகர்

இன்று, விஜய்யின் வீட்டில் ஒரு இளைஞர் புகுந்துள்ள சம்பவம், சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவிவிட்டது. அவருடைய வீட்டில் நுழைந்தபோது, அந்த இளைஞர் எந்தவித அசம்பாவிதமும் செய்யாமல் இருந்திருந்தாலும் இந்த ஒரு விஷயம் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பதற்கு காரணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்த சம்பவத்தின் பின்னணி – அதிர்ச்சியூட்டும் சிக்கல்கள்

இந்த சம்பவம் அப்படி சாதாரணதல்ல. ஒருவேளை விஜய்யின் வீட்டிற்குள் வந்த அந்த இளைஞர் பின்னணியில் சிக்கல்கள் இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும், விஜய் தற்போது வெறும் நடிகர் மட்டுமில்லை தவெக தலைவருமாக அரசியலில் செயல்பட்டு வருவதால் எங்கிருந்து யார் மூலமாக பிரச்சினை வருகிறது என்பதை யூகிக்கவே முடியாது.

vijay
vijay photo

மொட்டை மாடியில் பதுங்கிய இளைஞர்

அதுவும் விஜய் வீட்டுக்குள் நுழைந்த அவர் மொட்டை மாடியில் ஒரு நாள் முழுவதும் ஒளிந்திருக்கிறார். சென்னை நீலாங்கரை பகுதியில் விஜய்யின் வீடு இருப்பதால் அங்கே காவல்துறை, மத்திய அரசின் y பிரிவு பாதுகாப்பு மற்றும் தனியார் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி அந்த இளைஞர் எப்படி விஜய்யின் வீட்டிற்குள் போனார் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.

விஜயின் வீட்டுக்குள் சென்று மொட்டை மாடி வரை ஒரு நாள் முழுவதும் உணவு தண்ணீர் இல்லாமல் பதுங்கி இருந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும். அங்கு இருப்பவர்கள் அலட்சியமாக விட்டார்களா அல்லது அவர்களின் யாராவது ஒருவர் உதவி செய்து அந்த இளைஞரை அனுப்பி வைத்தாரா என்பது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அத்துடன் விஜய் அந்த இளைஞரிடம் பேசும் பொழுது அவர் சாதாரணமாக பேசவும் இல்லை. பரபரப்பாக டென்ஷன் ஆகவும் இருப்பதை பார்த்த பொழுது அந்த இளைஞரை நீலாங்கரை போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. போலீசார் அந்த இளைஞரை விசாரித்த பொழுது அவர் மதுராந்தத்தை சேர்ந்த அருண் என்றும் 24 வயது என்பதும் தெரிய வந்திருக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்டவரா?

அது மட்டுமில்லாமல் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பதாகவும் வேளச்சேரியில் அவருடைய சித்தி வீட்டில் தங்கி இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. இதனை எடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநிலை காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. காவலர்களையும் மீறி மனநிலை பாதிக்கப்பட்டவர் எப்படி விஜய் வீட்டுக்குள் இருக்கும் மொட்டை மாடிக்குள் சென்று ஒரு நாள் முழுவதும் பதுங்கி இருக்க முடியும் என்பது தான் அனைவருடைய சந்தேகமாக இருக்கிறது. இதன் பின்னணியில் இருக்கும் மர்மத்தை தெரிந்து கொள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.