வெண்ணிலாவின் இறப்பை தற்கொலையாக மாற்றிய பசுபதி.. விஜய் காவிரிக்கு இடையே விழும் விரிசல் – Cinemapettai

Tamil Cinema News

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், பசுபதி பேச்சை கேட்டு விஜய் மீது பொய்யான வழக்கை கொடுத்ததால் விஜய்யுடன் சேர முடியாமல் போய்விட்டது என்ற ஆதங்கத்தில் பசுபதி வீட்டிற்கு வந்து வெண்ணிலா சண்டை போடுகிறார். அப்படி பசுபதியை கேள்வி கேட்டதும் ராகினி என்னுடைய அப்பாவை நீ எப்படி கேள்வி கேட்கலாம் என்று திட்டுகிறார்.

இதனால் கோபப்பட்ட வெண்ணிலா, ராகினியை அடித்து விடுகிறார். ராகினி அடி வாங்கியதை பார்த்ததும் பசுபதி, வெண்ணிலாவை மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி விடுகிறார். கீழே விழுந்த வெண்ணிலாவிற்கு ரத்தம் போனதை பார்த்து வெண்ணிலாவின் மாமா அழுது புலம்புகிறார். இது எதுவும் தெரியாத, காவிரி விஜய் காரிலேயே ரொமான்ஸ் முடித்துவிட்டு சாரதா வீட்டுக்கு வருகிறார்.

வந்ததும் வழக்கம் போல் சாரதா, காவேரி இடம் கேள்வி கேட்கிறார். ஆனால் காவிரிக்கு பொய் சொல்வதும், குடும்பத்தில் இருப்பவர்களை சமாளிப்பதும் பெரிய விஷயமே இல்லை. அதனால் ஈசியாக சமாளித்து விட்டு வேலையை பார்க்க போய் விடுகிறார். பிறகு ஒரு வழியாக எல்லா பிரச்சினையும் முடிந்து விட்டது என்று விஜய், தாத்தா பாட்டியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக உயிருக்கு போராடும் வெண்ணிலாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக சொல்லி பசுபதி ராகினி இடம் வெண்ணிலாவின் மாமா கெஞ்சுகிறார். ஆனால் பசுபதி எந்தவித ரியாக்ஷனும் கொடுக்காமல் அமைதியாக இருந்த நிலையில் வெண்ணிலவின் மாமா நீங்கள் தள்ளிவிட்ட விஷயத்தை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். ஆனால் என்னுடைய பொண்ணை நீங்கள் எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்கள் என்று கெஞ்சுகிறார்.

இதை கேட்டதும் பசுபதி, நீங்க இங்கு நடந்த விஷயத்தை வெளியே சொல்ல வேண்டும். விஜய் கிடைக்காத விரக்தியில் வெண்ணிலா மொட்டை மாடியில் இருந்து தற்கொலை செய்துவிட்டார் என்று சொல்ல வேண்டும் இல்லையென்றால் உங்களுடைய குடும்பத்தை நான் வேரோடு அறுத்து விடுவேன் என்று சொல்லி வெண்ணிலாவின் மாமாவை மிரட்டுகிறார்.

வெண்ணிலாவின் மாமாவுக்கும் வேற வழியில்லாமல் பயந்து போய் நீங்கள் சொல்றபடியே செய்கிறேன். இப்பொழுது வெண்ணிலாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போங்க என சொல்கிறார். அதற்கு பசுபதி, எப்படியும் வெண்ணிலா பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆனால் இதை காரணமாக வைத்து விஜய் மீது பழி விழுந்தால் விஜய் காவேரி ஒன்று சேராமல் இருப்பாங்க. உங்க வெண்ணிலாவுக்கு ஆத்ம சாந்தி அடையும் என்று சொல்லி வெண்ணிலவின் மாமாவை கூட்டு சேர்த்துக் கொண்டார்.

இந்த விஷயம் பத்திரிகையாளர்கள் மூலம் வெளியே வந்த பொழுது விஜய்க்கும் இது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது. இதனால் குற்ற உணர்ச்சியில் இருக்கும் விஜய் மற்றும் காவிரிக்கு இடையே சின்ன விரிசல் வர வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் காவிரி இந்த விஷயத்தை சும்மா விடமாட்டார். நிச்சயம் இதற்கு பின்னாடியில் இருக்கும் பசுபதியின் சதி வேலையை கண்டுபிடித்து ஜெயிலுக்கு அனுப்பி குற்ற உணர்ச்சியில் இருக்கும் விஜய்யை சரி செய்வார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.