வேலு பிரபாகரனை சூழ்ந்திருந்த சர்ச்சைகள்.. சிலுக்கின் கடைசி நாட்களில் கூட இருந்த தாடிக்காரர் இவரா? – Cinemapettai

Tamil Cinema News

Velu Prabhakaran: மறைந்த இயக்குனர் வேலு பிரபாகரன் வாழ்ந்த நாட்களில் சர்ச்சையும் இவரும் ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளாகவே இருந்திருக்கிறார்கள். வேலு பிரபாகரன் தன்னை பெரியார் ஆதரவாளராகவும், கடவுள் இல்லை என்ற நம்பிக்கை அதிகம் கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.

வேலு பிரபாகரனை சூழ்ந்திருந்த சர்ச்சைகள்

இதை தன்னுடைய படங்களில் புகுத்தியது பெரிய அளவில் அவருக்கு நெகட்டிவ் ஆகவும் மாறி இருக்கிறது. அதேபோன்று கடந்த 2009 ஆம் ஆண்டு இவர் இயக்கின அடித்த காதல் கதை திரைப்படம் சென்சார் போர்டு அலுவலர்களால் ரிலீஸ் செய்யவே கூடாது என அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு காட்சிகளை கொண்ட படம்.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ஷெர்லி தாஸ் வேலு பிரபாகரனை விட 25 வயது குறைவாக இருந்த போதிலும் இருவரும் திருமணம் செய்து கொண்டது மிகப்பெரிய சர்ச்சையை கொண்டு வந்தது.

வேலு பிரபாகரன் ஒரு பேட்டியில் பா*லி*ல் தொழில் செய்பவர்கள் கூட இந்த கதையை கேட்டு நடிக்க மாட்டேன் என்று சொன்னதாக. அது மட்டும் இல்லாமல் மறைந்த சில்க் ஸ்மிதா காதலன் இவர்தான்.

அனைவராலும் சொல்லப்படும் அந்த தாடிக்காரர் வேலு பிரபாகரன் தான் என பல ஆண்டுகளாக சொல்லப்பட்டது. இதை இதை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் கொடுத்த பேட்டியில் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

சில்க் சுமிதாவிற்கும் தனக்கும் நெருங்கிய உறவு இருந்தது உண்மைதான், என்னுடன் இருந்த உறவு முறிந்த பிறகு அவர் வேறொரு டாக்டருடன் நெருங்கிய நட்பில் இருந்தார். அவர் தான் அந்த தாடிக்காரர் என பல நாள் மர்ம முடிச்சை தெளிவுபடுத்தினார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.