செழியனை காப்பாற்ற சமையல்காரியாக மாறிய பாக்யா.. ஓவராக டார்ச்சர் செய்யும் ஈஸ்வரி – Cinemapettai

Tamil Cinema News

[

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் செழியனை எப்படியாவது வெளியே கூட்டிட்டு வர வேண்டும் என்று பாக்கியம் முயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில் லோக்கல் கவுன்சிலருக்கு எதிராக நிற்கும் பெருமாள் மூலம் எப்படியாவது அமைச்சரை சந்தித்து நடந்த பிரச்சினையை சொல்லி செழியனை காப்பாற்ற வேண்டும் என்று பாக்கியா உதவி கேட்டு இருக்கிறார்.

அந்த பெருமாளுக்கும் லோக்கல் கவுன்சிலரை பிடிக்கவில்லை, அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக பாக்யாவிற்கு உதவி செய்வதாக வாக்கு கொடுத்து இருக்கிறார். அமைச்சர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பாக்யாவை உள்ளே கூப்பிட்டு விட்டார். உள்ளே கூப்பிட்டதும் கொஞ்ச நேரம் இங்கே வெயிட் பண்ணுங்கள் அமைச்சர் வெளியே வருவாரு.

வந்ததும் உங்கள் பிரச்சனை என்னவென்று சொல்லுங்க என பெருமாள் சொல்லிவிட்டார். அதன் பிறகு அமைச்சர் வீட்டுக்கு வந்திருப்பவர்களுக்கு சமைப்பதற்காக வந்த சமையல்காரர்கள் வேலையில் சொதப்பி விட்டார்கள். இதனால் பெருமாளுக்கு பிரச்சினையாக வந்ததால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் பெருமாள் யோசித்துக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் பாக்கியா, நான் ஈஸ்வரி ரெஸ்டாரன்ட் வைத்து நிறைய சமையல் ஆர்டரை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறேன். உங்களுக்கு நான் உதவி பண்ணுகிறேன் என்று சொல்லி செல்வியும் பாக்கியாவும் அங்கே சமையல்காரியாக மாறிவிட்டார்கள். உடனே பெருமாளும், இதுதான் சான்ஸ் நீங்கள் நல்ல சமைத்து, சாப்பிடுபவர்களை திருப்தி படித்து விட்டீர்கள் என்றால் நிச்சயம் இதை வைத்து அமைச்சர் உங்களுக்கு உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும் என்று சொல்லிவிட்டார்.

அதன் பிறகு பாக்யா மற்றும் செல்வி இருவரும் சேர்ந்து அனைத்து உணவுகளையும் சமைத்து விட்டார்கள். எல்லோரும் சாப்பிட ஆரம்பித்த நிலையில் பெருமாளை தேடி பாக்கியா அலைகிறார். ஆனால் அமைச்சர், முக்கியமான வேலை விஷயமாக பெருமாளை வெளியே அனுப்பி இருக்கிறார் என்று தெரிந்ததும் பாக்யா ஐயோ என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழிக்கிறார்.

ஏனென்றால் அவர் மூலமாக அமைச்சரிடம் பேசி செழியனை வெளியே கூட்டிட்டு வரலாம் என்று நினைத்திருந்தார். தற்போது பெருமாள் இல்லை என்பதால் பாக்யா பதட்டப்பட ஆரம்பித்து விட்டார். இந்த சூழலில் ஈஸ்வரி போன் பண்ணி இவ்வளவு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராமல் எங்க சுத்திகிட்டு இருக்கிறார் என்று வாய்க்கு வந்தபடி திட்டி கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

உடனே பாக்யா நான் சமையல் ஆர்டர் எடுத்து இருக்கேன், சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி போனை கட் பண்ணி விடுகிறார். ஆனால் அமைச்சர், பாக்கியா செஞ்ச உதவிக்கு நன்றி கடன் செய்யும் விதமாக நிச்சயம் செழியினை வெளியே விடுவதற்கு உதவி செய்வார். இது எதையும் புரிந்து கொள்ளாமல் ஈஸ்வரி, பாக்கியவை திட்டி டார்ச்சர் செய்யும் அளவிற்கு கொடுமையாக நடந்து கொள்கிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.