News:

Welcome To Startamilchat Forum Page...Register your Intro Here...!

Main Menu

Recent posts

#51
Dhinam Oru Thagaval / கிளியோபாட்ரா
Last post by Mytri - Dec 18, 2025, 12:16 PM
யார் இந்த கிளியோபாட்ரா..?

கிளியோபாட்ரா என்றவுடன் அவர் ஒரு பேரழகி; கழுதைப் பாலில் குளித்து தன் அழகை மேம்படுத்திக் கொண்டவர், என்பன போன்ற கதைகள்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது...

கிளியோபாட்ரா தொடர்பான ஹாலிவுட் திரைப்படங்களும் அவரை ஒரு "செ*ஸ் சிம்பலாகத்தான்" நமக்கு அறிமுகப் படுத்துகின்றன..

ஆனால் உண்மையில் கிளியோபாட்ரா ஒரு பன்முகத்தன்மையும் நுண்ணறிவாற்றலும் மேதமையும் கொண்ட பன்மொழி வித்தகர்; ஆய்வாளர்; மருத்துவர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா...?

1. கிளியோபாட்ரா தனது 17வது வயதில் அரசியாக முடிசூட்டிக் கொண்டார்.

2. அவரால் 9 மொழிகளில் எழுத, படிக்க, பேச முடியும்.

3. அவருக்கு பண்டைய எகிப்திய மொழி தெரியும்

4. அவரது காலத்தில், எகிப்திய மொழி சித்திர எழுத்துக்களை படிக்கத் தெரிந்த ஒரு சிலரில் கிளியோபாட்ராவும் ஒருவர்.

5. கிரேக்க மொழி தெரியும் அவருக்கு

6. பார்த்தியன், ஹிப்ரூ, மெடஸ், டிராகுலாடைட்டிஸ், சிரியன், எத்தியோப்பியன் மற்றும் அரபி மொழிகளில் சரளமாக எழுத, படிக்க, பேசத் தெரியும் அவருக்கு..

7. இது தவிர, அவர் உலக அரசியல், புவியியல், வரலாறு, வானியல், கணிதம், மருத்துவம், அல்கெமி எனப்படும் ரசவாதம் (தகரத்தை தங்கமாக்கும் வேதியியல்), விலங்கியல், பொருளாதாரம் என பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார்.

கிளியோபாட்ரா தனக்கென தனியாக ஒரு சோதனைச் சாலையை உருவாக்கி அதில் தனது ஆய்வுகளை நடத்தி வந்தார்.

மூலிகைகள் அழகுக் குறிப்புகள் பற்றிய புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.

அவரது புத்தகங்கள் புகழ்பெற்ற அலெக்சாண்டரியா நூலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் கி மு 319 இல் அந்த நூலகத்தில் நிகழ்ந்த ஒரு தீவிபத்தில் அந்த புத்தகங்கள் தீக்கிரையாயின என்று கூறப்படுகிறது.

புகழ்பெற்ற ரோமானிய இயற்பியலாளர் கலன் (Galen of Pergamon) கிளியோபாட்ராவின் மருத்துவக் குறிப்புகளை மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளார்.

அவற்றில் முக்கியமானது வழுக்கை தலையில் முடி வளர வைக்கும் எண்ணெய் தயாரிப்பு முறைகள் குறித்தவை ஆகும்.

அறிவியல் மற்றும் மருத்துவம் குறித்த பல்வேறு ஆய்வுகள் செய்து அவற்றை அனைவருக்கும் பயன் தரும் வகையில் எழுதி வைத்த பேரழகி கிளியோபாட்ரா என்ற மனிதகுலத்தின் போற்றத்தகு ஆளுமை தன் 39வது வயதிலேயே இறந்துவிட்டார்...
#52
Quote from: Poochandii on Dec 17, 2025, 10:51 PMமுடிவில்லா கதைகள் உண்டு
ஆரம்பமில்லா கவிதையேது ?

முடிவில்லா நேரம் உண்டு
ஆரம்பமில்லாத அன்பேது ?

முடிவில்லா உறக்கம் உண்டு
ஆரம்பமில்லாத உயிரேது ?

நிஜமில்லா நிழல் உண்டு
ஆரம்பமில்லா கனவேது ?


ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காலம் உண்டு.
ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு வேலை உண்டு.
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரம் உண்டு.
இவை அனைத்திற்கும் ஒரு தொடக்கம் உண்டு.


அற்பமான ஆரம்பத்தை விருப்பமாக ஏற்றால்,
சிற்பமான சிரிப்பும் சிறகாகவேஅமையும்.

ஆரம்பத்தின் எழுச்சி, முடிந்தவரை முயற்சி
காலத்தின் தொடர்ச்சி, இறுதியில் மகிழ்ச்சி
excellent lines enna poochi kalakitiye
#53
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார்.
பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது,
'டைம் முடிந்து விட்டது' என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.
பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.
கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம்
என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.
இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும்,
பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம்
அவருக்கு இருந்தது.

அப்போது, அவர் கண் முன்னால், பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின.பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெஷின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா ?என அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை.
உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.
இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும்,
இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.
இன்று உலகளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன.
ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன்
84வது வயதில் கடந்த 2020 மே 19ம் தேதியன்று காலமானார்.......

பகிர்வு
#54
ID Name Change Rules

1. ID name change requests will not be accepted before completing 3 months from the registration date.


2. One-time ID name change only. Multiple requests will be rejected.


3. Claiming or demanding an ID name that was previously used by another user is strictly prohibited.


4. Violation of these rules may result in

              OR

5. Raise request through reachstartamilchat@gmail.com
#55
இந்தியாவில் இருக்கும் கிராமங்களில் மிகவும் செலவச் செழிப்பில் இருக்கும் மிகப் பணக்கார கிராமம் மதாபர் நவவியாஸ் தான். இந்தக் கிராமத்தை ஆசியாவின் பணக்கார கிராமம் என்றும் சொல்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ்-அஞ்சர் நெடுஞசாலைக்கு அருகில் 4 கி.மீ. தொலைவில் உள்ள புஜியோ மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்தக் கிராமத்தின் மக்கள்தொகை 15 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் கிராமத்தினர் ஊரைக் காலிசெய்துவிட்டு நகரங்களை நோக்கி குடியேறிக்கொண்டிருக்கும் போது இங்கோ மற்ற நகரங்களில் இருந்து இந்த கிராமத்தை நோக்கி மக்கள் குடியேறி வருகிறார்கள்.

இங்கு மூன்று மாடிகளுக்கு குறைவான வீட்டையோ கடையையோ பார்க்கமுடியாது. மின்சாரமும் தண்ணீரும் 24 மணி நேரமும் தங்குதடையின்றி கிடைக்கிறது. உலகத்தரம் வாய்ந்த மெட்ரிக் பள்ளி, சிறப்பு வசதி பெற்ற சுகாதார மையம், மிகப்பெரிய கோயில் என நகரத்தை தூக்கிப்பிடிக்கும் எல்லா சமாச்சாரங்களும் இங்குண்டு.

இந்தக் கிராமத்தினர் பெரும்பாலோனார் 'லேவா படேல்' என்ற வணிக சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வணிகத்தில் சிறந்து விளங்குபவர்கள். இவர்களின் தொழில் நேர்த்திக்கும் பொருளாதார வெற்றிக்கும் அடையாளமாக இந்தக்  கிராமம் உள்ளது.

400 வருடங்களுக்கு முன்பு சவுராஷ்டிரா பகுதியில் இருந்து கட்ச் பகுதிக்கு இவர்கள் இடம் பெயர்ந்தார்கள். 1800-களில் கடல் கடந்த வணிகம் இவர்களுக்கு கை கொடுத்தது. கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு வியாபாரிகளாகவும், கொத்தனார்களாகவும், தச்சர்களாகவும், கூலி ஆட்களாகவும் சென்று செல்வம் திரட்டினர்.

இவர்கள் தான்சானியாவில் உள்ள சான்சிபாரில் நிரந்தரமாக குடியேறினர். மேலும், சோமாலியா, உகாண்டா, காங்கோ, ரூவாண்டாவிலும் குடியேறினார்கள். 1960-களில் அங்கிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். இப்படி குடியேறிய அனைவரும் தங்கள் தாய் மண்ணான மூதாதையர் கிராமங்களுடன் தொடர்பில் இருந்தார்கள். அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றுதான் மதாபர்.

1990-களின் தொடக்கத்தில் லேவா படேல்கள் தங்கள் பூர்வீக இடங்களுக்கு திரும்ப நினைத்தார்கள். அப்படி திரும்பிய அவர்கள் பழைய கிராமத்திற்கு அருகிலேயே புதிய கிராமத்தை உருவாக்கினார்கள். இந்தக் கிராமத்தில் வாழ்பவர்களில் 60 சதவீதத்தினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இந்த சின்ன கிராமத்தில் 25 வங்கிகள் உள்ளன. தனியார், தேசிய வங்கிகள் அனைத்தும் தங்களின் கிளைகளை இங்கே போட்டிப்போட்டு தொடங்குகின்றன. காரணம் குவியும் டெபாசிட் தொகைதான். இங்கு வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச டெபாசிட் தொகையே ரூ.20 லட்சம்தான்.

2005-ம் ஆண்டில் இந்த வங்கிகள் வெளியிட்ட கணக்கின்படி 2 ஆயிரம் கோடி ரூபாயை இந்த கிராமத்தினர் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்துள்ளனர். இங்கு ஒரு தனிநபரின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 13 லட்சமாக உள்ளது. இங்கு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாயை வங்கி இருப்பாக வைத்துள்ளனர்.

இதுபோக இவர்கள் ஆண்டுதோறும் 10 முதல் 15 கோடி ரூபாயை நிரந்தர வைப்பு நிதியில் போட்டு வைத்துள்ளார்கள். இங்கு நிலத்தின் மதிப்பும் அதிகம். ஒரு சதுர மீட்டர் 35 ஆயிரம் ரூபாய். அரசு இலவசமாக கொடுக்கும் எதையும் இந்த மக்கள் வாங்குவதில்லை. 2001-ம் ஆண்டில் குஜராத்தில் நிகழ்ந்த பெரிய நிலநடுக்கத்தில் இந்தக் கிராமம் லேசான பாதிப்பை சந்தித்தது. அதற்காக நிவாரண தொகையாக மத்திய அரசு ரூ.20 கோடியை இங்கிருக்கும் அஞ்சலகத்தில் சேர்த்தது. ஆனால், இதுவரை ஒருவர்கூட இந்தப் பணம் கேட்டு வந்ததில்லை என்பதே இந்தக் கிராமத்தின் செழுமைக்கு அத்தாட்சி.  இலவசம் இவர்களுக்கு பிடிப்பதில்லை. அது பிச்சை எடுப்பதற்கு சமமானது என்பது இவர்களின் நம்பிக்கை.

தேசத்தில் இருக்கும் மற்ற கிராமங்கள் என்று இந்த நிலையை அடையுமோ..?
#56
முடிவில்லா கதைகள் உண்டு
ஆரம்பமில்லா கவிதையேது ?

முடிவில்லா நேரம் உண்டு
ஆரம்பமில்லாத அன்பேது ?

முடிவில்லா உறக்கம் உண்டு
ஆரம்பமில்லாத உயிரேது ?

நிஜமில்லா நிழல் உண்டு
ஆரம்பமில்லா கனவேது ?


ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காலம் உண்டு.
ஒவ்வொரு காலத்திற்கும் ஒரு வேலை உண்டு.
ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரம் உண்டு.
இவை அனைத்திற்கும் ஒரு தொடக்கம் உண்டு.


அற்பமான ஆரம்பத்தை விருப்பமாக ஏற்றால்,
சிற்பமான சிரிப்பும் சிறகாகவேஅமையும்.

ஆரம்பத்தின் எழுச்சி, முடிந்தவரை முயற்சி
காலத்தின் தொடர்ச்சி, இறுதியில் மகிழ்ச்சி
#57
Quote from: Cleopatra on Dec 17, 2025, 07:07 PMஒவ்வொரு தொடக்கம்

ஒவ்வொரு தொடக்கமும் சுலபமில்லை,
உயர்ந்த சுவர்கள் முன் நிற்கும்.
ஆனால் ஒரு ஒரு படியாக சென்றால்,
அசாத்தியம் கூட அடங்கும் நாள்தோறும்.

ஒவ்வொரு தொடக்கமும் சவால்கள் தரும்,
அவை உன் உள்ளத்தில் வீரனை உருவாக்கும்.
போராடும் போதே பலம் பெருகும்,
உள்ளங்கையில் நம்பிக்கை மலரும்.

ஒவ்வொரு விடியலும் சொல்வது இதையே:
"மீண்டும் எழு, மீண்டும் நட" என்பதே.
மாலையின் சூரியன் மறைந்தாலும்,
காலை ஒளி மீண்டும் பிறக்கும்.

முடிவின் பின்னும் தொடக்கம் காத்திருக்கிறது,
உயிர் இருக்கும் வரை வாய்ப்புகள் நிறைந்திருக்கிறது.
உன் மூச்சு இருக்கும் வரை பயமின்றி நட,
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம்!!!!

aagachirandha arumaiyana padaipu ungalin indha varigal
#59
Quote from: Cleopatra on Dec 17, 2025, 07:07 PMஒவ்வொரு தொடக்கம்

ஒவ்வொரு தொடக்கமும் சுலபமில்லை,
உயர்ந்த சுவர்கள் முன் நிற்கும்.
ஆனால் ஒரு ஒரு படியாக சென்றால்,
அசாத்தியம் கூட அடங்கும் நாள்தோறும்.

ஒவ்வொரு தொடக்கமும் சவால்கள் தரும்,
அவை உன் உள்ளத்தில் வீரனை உருவாக்கும்.
போராடும் போதே பலம் பெருகும்,
உள்ளங்கையில் நம்பிக்கை மலரும்.

ஒவ்வொரு விடியலும் சொல்வது இதையே:
"மீண்டும் எழு, மீண்டும் நட" என்பதே.
மாலையின் சூரியன் மறைந்தாலும்,
காலை ஒளி மீண்டும் பிறக்கும்.

முடிவின் பின்னும் தொடக்கம் காத்திருக்கிறது,
உயிர் இருக்கும் வரை வாய்ப்புகள் நிறைந்திருக்கிறது.
உன் மூச்சு இருக்கும் வரை பயமின்றி நட,
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தொடக்கம்!!!!

nice sis 💕
#60
Quote from: Mytri on Dec 17, 2025, 04:57 PMநாளின் தொடக்கம் நம் நினைவுகளின் தொடக்கம் அத்தனைக்கும் தொடக்க புள்ளி உண்டு!!!

அதுவே ஆரம்ப புள்ளி நம் அனைவருக்கும் ஆரம்பம் என்ற ஒன்று உண்டு அது வழிநடத்த நாம் மேற்கொள்ளும் பயணமே நம் வாழ்க்கை பயணம்!!!!

எண்ணமும் செயலும் ஆரம்பம் இன்றி முடிவை எட்டுவதில்லை!!!

 ஒரு நல்ல என்னம் நல்ல செயலை உருவாக்கும் அதன் பயணம் நல்லதை நோக்கி ஒரு நல்ல முடிவை தரும்!!!

அந்த முடிவும் ஒரு ஆரம்பமே நம் அடுத்த பணத்திற்கு🌹🌹🌹
(nice dr ithe mathri enoda ariva use pani eluthren athuku start ah irukatum 🦥🦥🦥🤭🤭)